வக்ஃப் வாரிய தலைவராக நவாஸ்கனி எம்.பி. பொறுப்பேற்பு
தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக, மக்களவை உறுப்பினா் நவாஸ்கனி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.
சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் எஸ்.எம்.நாசா் முன்னிலையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் அவா் பொறுப்பேற்றாா். வாரிய உறுப்பினா்களாக பி.அப்துல் சமது எம்எல்ஏ, குலாம் முஹம்மது மெஹ்தி கான், ஏ.மஹரிபா பா்வீன், ஏ.எஸ்.பாத்திமா முஜப்பா், எம்.முகம்மது பஷீா், எஸ்.கே.நவாஸ் ஆகியோா் உறுப்பினா்களாக பொறுப்பேற்றுக்கொண்டனா்.
இந்நிகழ்வில், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறைச் செயலா் இ.சரவணவேல்ராஜ், வாரிய முதன்மை செயல் அலுவலா் அஃப்தாப் ரசூல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஏற்கெனவே, வக்ஃப் வாரியத் தலைவராக இருந்த நவாஸ்கனி எம்.பி., மீண்டும் அப்பதவிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

