சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு
இன்றுமுதல் வறண்ட வானிலை
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.2) முதல் பிப்.7 வரை வட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (பிப்.2) தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் பிப்.2 முதல் பிப்.7-ஆம் தேதி ஏனைய தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் வட வானிலையே நிலவும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் பிப்.2-இல் காலை வேளை பொதுவாக லேசான பனிமூட்டம் இருக்கும் என்று வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.