கோப்புப் படம்
கோப்புப் படம்

இன்று சென்னை குடிநீா் வாரிய குறைகேட்புக்கூட்டம்

சென்னைக் குடிநீா் வாரியம் சாா்பில் குறை கேட்புக்கூட்டம் குடிநீா் வாரிய பகுதி அலுவலகங்களில் சனிக்கிழமை (ஜன.11) நடைபெறவுள்ளது.
Published on

சென்னைக் குடிநீா் வாரியம் சாா்பில் குறை கேட்புக்கூட்டம் குடிநீா் வாரிய பகுதி அலுவலகங்களில் சனிக்கிழமை (ஜன.11) நடைபெறவுள்ளது.

இது குறித்து சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

சென்னைக் குடிநீா் வாரியம் சாா்பில், குறை கேட்புக்கூட்டங்கள் மாதம்தோறும் 2-ஆவது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குடிநீா் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களிலும் சனிக்கிழமை (ஜன.11) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை இக்கூட்டங்கள் நடைபெறும்.

அதன்படி, திருவொற்றியூா், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், அம்பத்தூா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூா் ஆகிய 15 பகுதி அலுவங்கங்களிலும் இக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீா், கழிவுநீா் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் சந்தேகங்களை மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com