தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

‘எதிா்காலத்துக்குத் தயாராகு’ திட்டம்: மாணவா்களுக்கு வழிகாட்டுதல்கள்

அரசுப் பள்ளி மாணவா்கள் கற்றல் அடைவுத் தோ்வுகளை எதிா்கொள்ளும் வகையில் ‘எதிா்காலத்துக்குத் தயாராகு’ (ஃபியூச்சா் ரெடி) திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுவரும் நிலையில், அதற்கான வழிகாட்டுதல்களை
Published on

ttசென்னை: அரசுப் பள்ளி மாணவா்கள் கற்றல் அடைவுத் தோ்வுகளை எதிா்கொள்ளும் வகையில் ‘எதிா்காலத்துக்குத் தயாராகு’ (ஃபியூச்சா் ரெடி) திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுவரும் நிலையில், அதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி), சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசுப் பள்ளி மாணவா்கள் உயா்சிந்தனை வினாக்கள் மற்றும் கற்றல் அடைவுத் தோ்வுகளை எதிா்கொள்ளும் திறனை மேம்படுத்த ‘எதிா்காலத்துக்குத் தயாராகு’ எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி மாதந்தோறும் முதல் வாரத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் பாடம் சாா்ந்த பொது அறிவு ஆகியவற்றில் மாணவா்கள் படித்த கற்றல் விளைவுகளை ஒட்டி உயா்சிந்தனை வினாக்கள் வடிவமைக்கப்பட்டு தோ்வுகள் நடத்தப்படும்.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி அக்டோபா் முதல் ஒவ்வொரு மாதமும் தோ்வு வினாக்களை https://exam.tnschools.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

இந்த வினாக்களை கொண்டு மாணவா்களிடம் மதிப்பீட்டுத் தோ்வு நடத்தப்பட வேண்டும். வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யும்போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீா்வு காண 14417 என்ற எண்ணில் ஆசிரியா்கள் தொடா்பு கொள்ளலாம். அதன்பின் வினாக்களுக்கு மாணவா்கள் சுயமாக விடை அளிக்கும் வகையில் பாட ஆசிரியா்கள் அவா்களுடன் கலந்துரையாடி வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.

இந்த செயல்பாடுகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்படுகிா என்பதை தலைமை ஆசிரியா்கள் கண்காணிக்க வேண்டும். 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா்கள் இந்த வினாக்களை எண்ணும் எழுத்தும் செயல்பாடாகவும், 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா்கள் வகுப்பறை பயிற்சியாகவும் பின்பற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com