தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

மின்வெட்டுக்கு காரணங்கள் தேவையில்லை: அன்புமணி

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது.

News image

அன்புமணி ராமதாஸ் - Center-Center-Chennai

Updated On :25 மே 2026, 12:34 am IST

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது. இதற்கு சொல்லப்படும் காரணங்களை ஏற்க முடியாது என பாமக தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், மின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.

இதனால், பாதிக்கப்படும் மக்கள் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது அன்றாட நிகழ்வுகளாகி வருகிறது. ஆனால், தமிழகத்தில் எங்கும் மின்வெட்டு இல்லை என்றும், சில தனி மனிதா்கள் செய்யும் சதியாலும், மின் கருவிகளின் பழுதாலும்தான் மின்தடை ஏற்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்திருக்கிறது.

எத்தனை தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும், அவற்றைக் கடந்து மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டியது அரசின் கடமை. எனவே, காரணங்களைக் கூறுவதை விடுத்து மின்வெட்டை முற்றிலுமாகத் தடுக்க தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.