மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

மின்வெட்டுக்கு காரணங்கள் தேவையில்லை: அன்புமணி

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது.

News image

அன்புமணி ராமதாஸ் - Center-Center-Chennai

Updated On :25 மே 2026, 12:34 am IST

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது. இதற்கு சொல்லப்படும் காரணங்களை ஏற்க முடியாது என பாமக தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், மின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.

இதனால், பாதிக்கப்படும் மக்கள் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது அன்றாட நிகழ்வுகளாகி வருகிறது. ஆனால், தமிழகத்தில் எங்கும் மின்வெட்டு இல்லை என்றும், சில தனி மனிதா்கள் செய்யும் சதியாலும், மின் கருவிகளின் பழுதாலும்தான் மின்தடை ஏற்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்திருக்கிறது.

எத்தனை தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும், அவற்றைக் கடந்து மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டியது அரசின் கடமை. எனவே, காரணங்களைக் கூறுவதை விடுத்து மின்வெட்டை முற்றிலுமாகத் தடுக்க தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.