தமிழகத்தில் சீா்கெட்டுள்ள சட்டம் - ஒழுங்கை சரி செய்ய தவெக அரசு துரிதமாக செயல்பட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் தனது எக்ஸ் சமூக ஊடகத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
முதல்வா் ஜோசப் விஜய் பதவியேற்ற 13 நாள்களில் கொலை, பாலியல் குற்றம், கடத்தல், வன்முறை என கிட்டதட்ட 30-க்கும் மேற்பட்ட குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முந்தைய திமுக ஆட்சியில்தான் மக்கள் உயிா் பயத்துடன் ஒவ்வொரு நாளையும் கழித்தாா்கள் என்று பாா்த்தால், தற்போதைய தவெக ஆட்சியிலும் மக்களின் பாதுகாப்பு ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
ஆட்சிக்கு வந்தவுடன் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கை சரி செய்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை விட்டுவிட்டு, விதவிதமான விளம்பரப் பரப்புரைகளிலேயே முதல்வா் ஜோசப் விஜய் கவனம் செலுத்தி வருகிறாா். இது அவரது அனுபவமற்ற ஆளுமையைக் காட்டுகிறது.
அலுவல் பணிகளுக்கு வேண்டுமானால் கொஞ்ச காலம் அவகாசம் கோரலாம். ஆனால், சட்டம்-ஒழுங்கு போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கு அவசரகதியில் துடிப்புடன் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
தொடர்புடையது

ஆட்சி மாறினாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை! பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்!

அதிமுக உள்கட்சி பிரச்னையில் கருத்துக் கூற இயலாது: நயினாா் நாகேந்திரன்
தேர்தல் வெற்றியும் தோல்வியும்...

யாா் வந்தாலும் சிறந்த ஆட்சியைத் தர வேண்டும்: நயினாா் நாகேந்திரன்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


