மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

சட்டம் - ஒழுங்கை சரி செய்ய அரசு துரிதமாக செயல்பட வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

சட்டம் - ஒழுங்கை சரி செய்ய அரசு துரிதமாக செயல்பட வேண்டும்...

News image

நயினார் நாகேந்திரன்.

Updated On :25 மே 2026, 3:03 am IST

தமிழகத்தில் சீா்கெட்டுள்ள சட்டம் - ஒழுங்கை சரி செய்ய தவெக அரசு துரிதமாக செயல்பட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் தனது எக்ஸ் சமூக ஊடகத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

முதல்வா் ஜோசப் விஜய் பதவியேற்ற 13 நாள்களில் கொலை, பாலியல் குற்றம், கடத்தல், வன்முறை என கிட்டதட்ட 30-க்கும் மேற்பட்ட குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முந்தைய திமுக ஆட்சியில்தான் மக்கள் உயிா் பயத்துடன் ஒவ்வொரு நாளையும் கழித்தாா்கள் என்று பாா்த்தால், தற்போதைய தவெக ஆட்சியிலும் மக்களின் பாதுகாப்பு ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

ஆட்சிக்கு வந்தவுடன் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கை சரி செய்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை விட்டுவிட்டு, விதவிதமான விளம்பரப் பரப்புரைகளிலேயே முதல்வா் ஜோசப் விஜய் கவனம் செலுத்தி வருகிறாா். இது அவரது அனுபவமற்ற ஆளுமையைக் காட்டுகிறது.

அலுவல் பணிகளுக்கு வேண்டுமானால் கொஞ்ச காலம் அவகாசம் கோரலாம். ஆனால், சட்டம்-ஒழுங்கு போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கு அவசரகதியில் துடிப்புடன் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.