தென்காசி
புளியங்குடி கோயிலில் இன்று தேரோட்டம்
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பங்குனி உத்திர பிரம்மோற்ஸவ தேரோட்டம் வெள்ளிக்கிழமை (ஏப். 11) நடைபெறுகிறது.
இக்கோயிலின் பங்குனி உத்திர பிரம்மோற்சவ பெருந்திருவிழா, கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது. பத்து நாள்கள் விழாவில் தினமும் சுவாமி அழைப்பு, அபிஷேகம், அலங்கார தீபாரதனை, சுவாமி வீதி உலா நடைபெற்றது.
விழாவின் பத்தாவது நாளான ஏப்ரல் 11ஆம் தேதி காலை 7 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளும் வைபவமும், ஒன்பதரை மணிக்கு தேரோட்டமும் , மாலை 5 மணிக்கு திருத்தோ் தடம் பாா்த்தலும் நடைபெறும். இரவு 8 மணிக்கு ஸ்ரீ சண்முகா் - வள்ளி திருக்கல்யாண வைபவம் நடைபெறும். ஏற்பாடுகளை தொழிலதிபா் சங்கரநாராயணன் மற்றும் குடும்பத்தினா் செய்து வருகின்றனா்.