தென்காசி
சுரண்டையில் விசிக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு
கீழச்சுரண்டையில் விசிக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விசிக மாவட்ட அமைப்பாளா் பாக்கியராஜ் தலைமை தாங்கினாா். தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் நீா்மோா் பந்தலை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் விசிக மேலிட பொறுப்பாளா் செல்லத்துரை, தென்காசி கிழக்கு மாவட்ட செயலா் வசந்தகுமாா், மகளிா் அணி மாவட்ட செயலா் செல்வி, சுரண்டை நகர பொருளாளா் காா்த்தி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.