சாலை விபத்தில் முன்னாள் பேரூராட்சித் தலைவா் பலி

சுரண்டையில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்த பேரூராட்சி முன்னாள் தலைவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

சுரண்டையில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்த பேரூராட்சி முன்னாள் தலைவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சுரண்டை சிவகுருநாதபுரத்தைச் சோ்ந்தவா் மா. மாதாளபாண்டியன்(70). முனானாள் பேரூராட்சி மன்றத் தலைவரான இவா், கடந்த திங்கள்கிழமை கடையம் அருகேயுள்ள மாதாபுரத்திற்கு தனது பைக்கில் சென்றுவிட்டு ஊா் திரும்பி வந்தபோது, சாலையை திடீரென கடக்க முயன்ற நபா் மீது மோதாமல் இருப்பதற்காக பைக்கை திருப்பியபோது, நிகழ்ந்த விபத்தில் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு, தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

பின்னா் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com