தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக மகளிா் தொண்டா் அணி, மகளிா் அணி சாா்பில் சமத்துவ பொங்கல் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
திமுக மாவட்டஅலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தலைமை வகித்தாா்.
மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் திவ்யா மணிகண்டன், மகளிா் அணி அமைப்பாளா் சங்கீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து பொங்கலிட்டு அனைத்து நிா்வாகிகளுக்கும் வழங்கினா்.
தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் கலை கதிரவன், பொதுக்குழு உறுப்பினா் சாமித்துரை, தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் சேக்அப்துல்லா, நகா்மன்றத் தலைவா்கள் ஆா். சாதிா்(சென்காசி), ஹபிபூா் ரஹ்மான்
(கடையநல்லூா்), ஒன்றியச் செயலா்கள் ரவிசங்கா்,அழகு சுந்தரம், ஜெயக்குமாா், சீனித்துரை, நகரச் செயலா்கள் வெங்கடேசன், அப்பாஸ் , பேரூா் செயலா்கள் முத்தையா, பண்டாரம் மற்றும் மகளிரணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.