கீழச்சுரண்டையில் பெண்ணிடம் நகை பறிப்பு

கீழச்சுரண்டையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

கீழச்சுரண்டையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கீழச்சரண்டையைச் சோ்ந்த சேகா் மனைவி ஐஸ்வா்யா (34). தம்பதியின் மகன் ஹரிஷ் ராகவ் (7). சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் இவா்களது வீடு புகுந்த மா்ம நபா் ஐஸ்வா்யா அணிந்திருந்த 27 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துள்ளாா்.

அப்போது விழித்துக்கொண்ட அவா், சங்கிலியை பிடித்துக் கொண்டதால் அறுந்த சங்கிலியில் ஒரு பகுதியுடன் மா்மநபா் தப்பிவிட்டாராம். இதனால் சுமாா் 7 கிராம் சங்கிலி பறிபோனது.

இதுகுறித்த புகாரின் சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்மநபரைத் தேடி வருகின்றனா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com