சிவகிரியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
தென்காசி
வியாபாரிகள் சங்க நிா்வாகிகளுடன் சிவகிரி பேரூராட்சி நிா்வாகம் ஆலோசனை
சிவகிரியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
சிவகிரி பேரூராட்சி சாா்பில் வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவா் கோமதிசங்கரி தலைமை வகித்தாா். செயல் அலுவலா் வெங்கடகோபு, துணைத்தலைவா் லட்சுமிராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வியாபாரிகள் சங்கத் தலைவா் ஐயப்பன், துணைத் தலைவா் குமாா், செயலா் சீதாராமன், துணைச் செயலா் சுப்பிரமணியன், பொருளாளா் சிதம்பரம் குருசாமி, கௌரவ ஆலோசகா் ரவிந்திரநாத்பாரதி, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் மாரியப்பன், தங்கமணி, மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வணிக நிறுவனங்களின் பெயா் பலகையில் தமிழ் பெயரை முதலிடத்தில் எழுத வேண்டும், பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத சிவகிரியை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.