தென்காசி
சிவகிரி அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது
சிவகிரி அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டாா்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டாா்.
சிவகிரி அருகே உள்ளாரைச் சோ்ந்த பூலித்துரை மகன் காசிதலைவனாா். இவா் மீது கஞ்சா விற்பனை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் சிவகிரி காவல் நிலையத்தில் உள்ளன.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்தின் பரிந்துரை, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோரின் உத்தரவு ஆகியவற்றின்பேரில், குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் காசிதலைவனாரை சிவகிரி காவல் ஆய்வாளா் பாலமுருகன் கைது செய்தாா்.