தென்காசி
கடையநல்லூா் அருகே தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு
கிருஷ்ணாபுரத்தில் பூச்சிமருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
கடையநல்லூா் அருகே கிருஷ்ணாபுரத்தில் பூச்சிமருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணாபுரம் நடுத்தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் கல்யாணசுந்தரம் (45). தொழிலாளி. இவரது மனைவி தங்கம். கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தங்கம் தனது சொந்த ஊரான திருவேட்டநல்லூருக்குச் சென்றுவிட்டாராம்.க்கு சென்று விட்டாராம்.
இந்நிலையில், கல்யாணசுந்தரம் கடந்த ஏப். 30ஆம் தேதி பூச்சிமருந்தைக் குடித்துத் தற்கொலைக்கு முயன்றாராம். அவரை அப்பகுதியினா் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.