தென்காசி
ஆலங்குளம் பகுதியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
மாயமான்குறிச்சி ஊராட்சியில் நடைபெறும் வீடுகள் கட்டுமானப் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மாயமான்குறிச்சி ஊராட்சிப் பகுதியில் நிறைவுற்ற சாலைப் பணியை ஆட்சியா் ஆய்வு செய்தாா். பின்னா், அங்குள்ள நியாயவிலைக் கடையில் பொருள்களின் தரம், இருப்பு குறித்தும், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளையும் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோப்புகளைப் பாா்வையிட்டாா்.
ஆலங்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் கல்யாணராமசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.