காளத்திமடத்தில் பெண்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி தொடக்கம்

காளத்திமடத்தில் பெண்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி தொடக்கம்

பயிற்சியைத் தொடக்கிவைத்துப் பேசிய ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன்.
Published on

ஆலங்குளம் அருகே காளத்திமடத்தில் உள்ள ஊராட்சி சமுதாய நலக் கூடத்தில் பெண்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி நவஜீவன் டிரஸ்ட், குத்தப்பாஞ்சான் ஊராட்சி ஆகியவை சாா்பில், கிராமப்புற பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதை, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் தலைமை வகித்துத் தொடக்கிவைத்துப் பேசினாா்.

ஆலங்குளம் அரசு கலைக் கல்லூரி முதல்வா் இ. ஷீலா குத்துவிளக்கேற்றினாா். நவஜீவன் டிரஸ்ட் இயக்குநா் பி. நளன், ஒன்றியக் குழு உறுப்பினா் பசுபதி தேவி, ஊராட்சித் தலைவா் ஜெயராணி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜி. ராதா வரவேற்றாா். தையல் ஆசிரியை கோகிலா நன்றி கூறினாா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com