சுரண்டையில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

சுரண்டையில் கஞ்சா விற்பனை செய்ததாக கைதானவா் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
Published on

சுரண்டையில் கஞ்சா விற்பனை செய்ததாக கைதானவா் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

பங்களாச்சுரண்டையைச் சோ்ந்தவா் தே.அருள்ராஜ் ஜெயக்குமாா் என்ற கோழி அருள்(52). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவா், கடந்த மாதம் கஞ்சா மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் கே.கமல் கிஷோா் பிறப்பித்த உத்தரவுப்படி, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அவரை போலீஸாா் சிறையில் வியாழக்கிழமை அடைத்தனா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com