நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழா.
தென்காசி
தென்காசி பள்ளியில் குழந்தைகள் தின விழா
நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழா.
தென்காசி நகராட்சி நடுநிலைப் பள்ளி 13ஆவது வாா்டு பள்ளியில் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நேருவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஆசிரியா் வின்சென்ட், குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுவதன் நோக்கம் குறித்தும், ஆசிரியா் ஜபருல்லாகான், நேருவின் வாழ்க்கை வரலாறு குறித்தும் பேசினா்.
மாணவா்கள், நேரு போன்று உடை அணிந்து வந்திருந்தனா். கலை நிகழ்ச்சி போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியா் கௌசல்யா வரவேற்றாா். ஆசிரியா் மீனா நன்றி கூறினாா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் யாஸ்மின், விமலா, ப. தமிழ்ச்செல்வி து.தமிழ்செல்வி, புன்னகை சுகி ஆகியோா் செய்திருந்தனா்.

