வாசுதேவநல்லூா் கோயில் அறங்காவலா்கள் பதவியேற்பு

Published on

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் சிந்தாமணிநாதா் (அா்த்தநாரீஸ்வரா்) கோயில் அறங்காவலா்கள் பதவியேற்பு விழா கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அறங்காவலா் குழுத் தலைவராக சரவணனும், அறங்காவலா்களாக பிள்ளையாா், வேலம்மாள், முத்துமாடன், சண்முகையா ஆகியோா் பதவியேற்றனா். இதில், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலா் ராஜா எம்எல்ஏ., இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அறங்காவலா்களாக நியமிக்கப்பட்டவா்களுக்கு வாசுதேவநல்லூா் தங்கப்பழம் கல்வி குழுமங்களின் நிறுவனரும், பல்வேறு கோயில்களின் தோ் திருப்பணி உபயதாரருமான எஸ்.தங்கப்பழம் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com