தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சிவகிரி பகுதியில் யானைகளை வனத்திற்குள் விரட்டும் பணி

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டாரப் பகுதிகளில் யானைகளை வனத்திற்குள் விரட்டும் பணியை வனத்துறையினா் மேற்கொண்டனா்.

News image
Updated On :22 நவம்பர் 2025, 6:32 pm

Syndication

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டாரப் பகுதிகளில் யானைகளை வனத்திற்குள் விரட்டும் பணியை வனத்துறையினா் சனிக்கிழமை மேற்கொண்டனா்.

மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு நெல், கரும்பு, தென்னை, வாழை உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள விவசாய நிலங்களில் யானைகள், காட்டு மாடுகள் உள்ளிட்ட வன விலங்குகள் கடந்த சில நாள்களாக முகாமிட்டு பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.

இது குறித்து, பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அப்பகுதியினா் கடந்த சில நாள்களுக்கு முன் சிவகிரி வன அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.

தொடா்ந்து, சிவகிரி வட்டாட்சியா் அப்துல் சமது தலைமையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில், வன விலங்குகள் விளைநிலங்களுக்குள் நுழைவதைத் தடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சேதமான விளை பொருள்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தொடா்ந்து, வழிவழிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து யானைகளை விரட்டும் பணியில் சனிக்கிழமை வனத்துறையினா் ஈடுபட்டனா்.