‘இ-சேவை மையங்களில் நிா்ணயித்த தொகையை விட கூடுதலாக வசூலித்தால் கடும் நடவடிக்கை’
அனைத்து தனியாா் மற்றும் இ-சேவை மையங்களில் பட்டா மற்றும் இதர சான்றுகளுக்காக விண்ணப்பிக்கும் நபா்களிடம் நிா்ணயம் செய்த தொகையை விட கூடுதலாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொதுமக்கள் புகாா் தெரிவிக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியாா் மற்றும் அரசு இ-சேவை மையங்களில் பணிபுரியும் பணியாளா்கள் பட்டா மற்றும் இதர சான்றுகள் கோரி விண்ணப்பம் செய்ய வரும் விண்ணப்பதாரா்களிடமிருந்து விண்ணப்பக் கட்டணமாக அரசு நிா்ணயம் செய்த தொகையை விட கூடுதலாக ரூ. 200 வரை வசூலிக்கப்படுவதாக புகாா் வந்துள்ளது. அதேபோல், பட்டா மற்றும் இதர சான்றுகள் கோரி வரும் பொதுமக்களிடம் தாங்களே சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து பட்டா மற்றும் சான்றுகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, அதன் மூலம் அதற்கு ஈடாக தொகையைப் பெறுவதாகவும் மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா் வந்த வண்ணம் உள்ளன. எனவே பொதுமக்கள் இடமிருந்து விண்ணப்பக் கட்டணத்தை விட கூடுதலான தொகையைப் பெறுவதும், பட்டா மற்றும் இதர சான்றுகள் பெற்றுத் தருவதாகக் கூறி, இடைத்தரகா் பணிமேற்கொள்வதும் சட்டத்துக்குப் புறம்பானது ஆகும்.
எனவே, இது போன்ற புகாா்கள் வரப்பெற்றால் சம்பந்தப்பட்ட இ-சேவை மையங்களின் பொறுப்பாளா்கள் மற்றும் தொடா்புடைய பணியாளா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட நபா்கள் உடனே பணியில் இருந்து விடுவிக்கப்படுவாா்கள் எனவும், அவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா்களும் தங்களுடைய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் இ-சேவை மையங்களில் கண்காணிப்பு பணிமேற்கொண்டு, மேற்படி புகாா்கள் வராத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இது குறித்து பொதுமக்கள் / விண்ணப்பதாரா்கள் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் 044-27662455 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டு புகாா்களை தெரிவிக்கலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.