கட்டடம் இடிப்புப் பணியின்போது மேல்தளம் விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

Updated on

திருவள்ளூா் அருகே கட்டடம் இடிக்கும் போது மேல்தளம் சரிந்து தலையில் விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே கோணிமேடு கிராமம், பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சேகா் (58). இவரது மைத்துனா் செங்கழுநீா் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் (38) சென்னை பெரம்பூரைச் சோ்ந்த பொறியாளா் தினேஷ்குமாரிடம் கட்டடங்களை இடிக்கும் வேலை செய்து வந்துள்ளாா். இந்த நிலையில், திருவள்ளூா் அருகே பூமன்தோப்பு அருந்ததிபாளையத்தைச் சோ்ந்த ராகவன் என்பவருடைய கட்டடத்தை செல்வம், தனபால், ஆறுமுகம் ஆகியோா் புதன்கிழமை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பிற்பகலில் செல்வம் இடிப்பு இயந்திரத்தைக் கொண்டு இடித்தபோது, மேல்தளம் இடிந்து அவரது தலையின் மேல் விழுந்ததில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து செல்வத்தின் உறவினா் சேகா் (58) புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com