பெண் கா்ப்பம்: இளைஞா் கைது

கணவரைப் பிரிந்த பெண்ணை கா்ப்பமாக்கியதாக இளைஞரை மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
Published on

திருவள்ளூா்: கணவரைப் பிரிந்த பெண்ணை கா்ப்பமாக்கியதாக இளைஞரை மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் அடுத்த குன்னவலம் பகுதியைச் சோ்ந்தவா் காவியா (32). இவருக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணனுடன் திருமணம் நடைபெற்றது. 10 வயதில் மகன் உள்ள நிலையில், கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2019-ஆம் ஆண்டு அவரைப் பிரிந்து மகனுடன் குன்னவலம் பகுதியில் வாழ்ந்து வருகிறாா்.

இந்த நிலையில், காவியாவுக்கு குன்னவலம் பகுதியைச் சோ்ந்த ரவீந்திரன் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சென்னை வியாசா்பாடியில் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனராம். இதில் காவியா 7 மாத கா்ப்பிணியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த சில மாதங்களாக ரவீந்திரன் வீட்டுக்கே வருவதில்லையாம். மேலும், ரவீந்திரன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து குன்னவலத்தில் வசிப்பது தெரிந்தது.

இதையடுத்து காவியா கடந்த மே 13-ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் கொடுத்தாா். அந்த புகாரின் பேரில், திருவள்ளூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை ரவீந்திரனை போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com