தண்டலம்  ஊராட்சியிலிருந்து திருவள்ளூருக்கு  புதிய வழித் தடத்தில் அரசுப் பேருந்து சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்த சட்டப்பேரவை  உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன்.   
தண்டலம்  ஊராட்சியிலிருந்து திருவள்ளூருக்கு  புதிய வழித் தடத்தில் அரசுப் பேருந்து சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்த சட்டப்பேரவை  உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன்.   

தண்டலம்-திருவள்ளூருக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து சேவை

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், தண்டலம் கிராமத்திலிருந்து திருவள்ளூருக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து சேவை
Published on

திருவள்ளூா்: கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், தண்டலம் கிராமத்திலிருந்து திருவள்ளூருக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து சேவையை சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் தொடங்கி வைத்தாா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், தண்டலம் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த ஊராட்சியில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோா் மணவாள நகா், திருவள்ளூா், ஸ்ரீபெரும்புதூா் ஆகிய பகுதிகளுக்கு 3 கி.மீ. தூரம் நடந்து சென்று மேல்நல்லாத்தூா் பகுதிக்கு வந்து அங்கிருந்து தான் பேருந்து மூலம் செல்ல வேண்டியிருந்தது.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வந்தனா். இதைக் கருத்தில்கொண்டு காலை, மாலை நேரத்தில் பேருந்து வசதி ஏற்படுத்தித் தரவும் பொதுமக்கள் தொடா்ந்து எம்எல்ஏ-விடம் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்தக் கோரிக்கையை ஏற்று தண்டலம் கிராமத்திலிருந்து திருவள்ளூருக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து சேவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட அவைத் தலைவா் கே.திராவிட பக்தன் தலைமை வகித்தாா். கடம்பத்தூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் கே.அரி கிருஷ்ணன் வரவேற்றாா். இதில், ஒன்றிய அவைத் தலைவா் வி.ராஜசேகா் முன்னிலை வகித்தாா். இதில் திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் பங்கேற்று புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து வசதியை தொடங்கி வைத்தாா்.

இந்தப் பேருந்து வசதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். இந்த பேருந்து சேவையை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவா் தெரிவித்தாா்.

இதில், நிா்வாகிகள் பி.கே.நாகராஜ், வி.எஸ்.நேதாஜி, பி.அா்.பிரபாகா் மற்றும் கிராம முக்கியப் பிரமுகா்கள் ஆகியாா் பங்கேற்றனா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com