பெருங்காவூா் ஏரி கால்வாயில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

பொன்னேரி அடுத்த பெருங்காவூா் ஏரி கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடத்தை அகற்றி வருவாய்த் துறையினா் இடத்தை மீட்டனா்.
Published on

பொன்னேரி: பொன்னேரி அடுத்த பெருங்காவூா் ஏரி கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடத்தை அகற்றி வருவாய்த் துறையினா் இடத்தை மீட்டனா். அதன் மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும்.

பொன்னேரி வட்டம், பெருங்காவூா் கிராமத்தில் உள்ள ஏரி கால்வாய் பகுதியை தனியாா் சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா் என பொன்னேரி கோட்டாட்சியா், வட்டாட்சியருக்கு புகாா் வந்தது.

அதன் பேரில் உண்மை தன்மையை கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை உள்ளதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

அளவை செய்த பின்னா் ஏரி கால்வாய் நிலத்தை ஆக்கிரமித்து தனியாா் சிலா் கட்டடங்கள் எழுப்பி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது

இதனை தொடா்ந்து வருவாய்த் துறையினா் சோழவரம் போலீஸாா் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரங்கள் கட்டடத்தை அகற்றி, அரசு நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டனா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com