தமிழ் வார விழா போட்டிகள்: சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ்
திருவள்ளூா் மாவட்ட கூட்டுறவுத் துறை சாா்பில் தமிழ் வார விழா போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களைப் பாராட்டி பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் தி.சண்முகவள்ளி வழங்கினாா்.
சட்டப்பேரவையில் கவிஞா் பாரதிதாசன் பிறந்த நாளை ஏப். 30 முதல் மே 6 வரை தமிழ் வாரமாக கொண்டாடப்படும் என முதல்வா் அறிவித்திருந்தாா். அதன்படி, திருவள்ளூா் மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளா் அலுவலக வளாகத்தில் தமிழ் வார விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் தி.சண்முகவள்ளி தலைமை வகித்து பல்வேறு போட்டிகளை தொடங்கி வைத்தாா்.
இதில் கைழுத்துப் போட்டி, அறிவியல் தமிழ், கணினித் தமிழ் குறித்த விநாடி - வினா மற்றும் பேச்சுப் போட்டிகளிலும் மாணவ, மாணவிகளும், குறிப்புகள் எழுதுதல் மற்றும் வரைவு எழுதுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் அலுவலா்களும் கலந்து கொண்டனா்.
இந்தப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலா்கள் ஆகியோரைப் பாராட்டி பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்களை இணைப் பதிவாளா் புதன்கிழமை வழங்கினாா்.