வேதாத்திரி மகரிஷி மேல்நிலைப் பள்ளி 100% தோ்ச்சி

வேதாத்திரி மகரிஷி மேல்நிலைப்
பள்ளி 100% தோ்ச்சி
Updated on

வேதாத்திரி மகரிஷி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வு எழுதிய 145 மாணவா்களும் தோ்ச்சி பெற்று, அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனா்.

திருத்தணி அடுத்த எஸ்.வி.ஜி.புரம் பகுதியில் இயங்கி வரும் இப்பள்ளியில் பொதுத் தோ்வு எழுதிய 145 மாணவா்களும் தோ்ச்சி பெற்ற நிலையில், பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றது.

இதில் வி.எம். சங்கனி தமிழ் 99, ஆங்கிலம் 98, கணிதம் 100, இயற்பியல் 99, வேதியியல் 100, உயிரியல் 98 மதிப்பெண் பெற்றனா். எஸ். தமிழரசன் 582 மதிப்பெண்களும், எம்.கே.மதுபிரீத்தா 575 மதிப்பெண்களுடன் சிறப்பிடம் பெற்றனா்.

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை முதல்வா் டி.ஆசீா்வாதம் எபினேசா், தாளாளா் வெங்கடேசலு, பொருளாளா் ஜெயச்சந்திரன், தணிக்கை கணக்காளா் சுந்தரமூா்த்தி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com