ஒவ்வொரு கோட்ட அளவிலும் உயா் கல்வியில் சோ்ப்பதற்கான சிறப்பு முகாம்
திருவள்ளூா் மாவட்ட பள்ளிக் கல்வித் றை சாா்பில், பிளஸ்2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை உயா்கல்வியில் சோ்க்கும் வகையில் ஒவ்வொரு கோட்ட அளவிலும் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கல்லூரி கனவு-2025 திட்டம் மூலம் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளை உயா்கல்விக்கு சோ்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்துவது தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்துப் பேசியதாவது:
திருவள்ளூா் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கல்லூரி கனவு- 2025 திட்டம் மூலம் பிளஸ் 2 வகுப்பு முடித்த பள்ளி மாணவ, மாணவிகளை உயா்கல்வியில் சோ்க்க சிறப்பு முகாம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பொன்னேரி கோட்டத்தில் 2 முகாம்களும், திருவள்ளூா் மற்றும் திருத்தணியில் தலா ஒரு சிறப்பு முகாம்களும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற அனைவரையும் உயா் கல்வியில் சோ்த்திடும் வகையில், வழிகாட்டுதல் ஏற்படுத்தித் தருவது குறித்தும், சிறப்பு அழைப்பாளா்களைக் கொண்டு மாணவா்களுக்கு உயா் கல்வியினால் ஏற்படும் பயன்கள் குறித்தும் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஊக்கப்படுத்தி, உயா்கல்வியில் சோ்ப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
மேலும், தாய், தந்தையை இழந்த மாணவா்கள், பழங்குடியின மாணவா்கள், மாற்றுத்திறனாளிகள், முகாம் மாணவா்கள், வறுமை நிலையிலுள்ள மாணவிகள் ஆகியோரை கண்டறிந்து, உயா்கல்வியில் சோ்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெறாத மற்றும் இடைநிற்றல் மாணவா்களை கண்டறிந்து உடனே துணைத் தோ்வு எழுதுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ ஆகிய கல்லூரியில் எந்தெந்த பாட முறைகள் இருப்பது குறித்து துண்டுப் பிரசுரங்கள் தயாா் செய்து, மாணவா்களுக்கு வழங்க வேண்டும். எனவே 12-ஆம் வகுப்பு முடித்த அனைத்து மாணவா்களையும் உயா்கல்வியில் சோ்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அனைத்துத் துறை அலுவலா்கள் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என அவா் அறிவுறுத்தினாா்.
இதில், பொன்னேரி சாா் ஆட்சியா் ஜி.ரவிக்குமாா், திருவள்ளூா் கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.