நரிக்குறவா் குடியிருப்பு பகுதியில் கஞ்சா போதையில் தொல்லை: திருவள்ளூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு

திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த அதிகத்தூா் ஊராட்சி நரிக்குறவா் இன மக்கள்.
நரிக்குறவா் குடியிருப்பு பகுதியில் 
கஞ்சா போதையில் தொல்லை: திருவள்ளூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு
Updated on

திருவள்ளூா் அருகே நரிக்குறவா் குடியிருப்பு பகுதியில் கஞ்சா போதையில் மின்வாரிய பணியாளா்கள் தொல்லை செய்து வருவதால், அங்குள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா்.

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், அதிகத்தூா் ஊராட்சி நரிக்குறவா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சீனிவாசபெருமாளிடம் அளித்த மனு:

இந்த ஊராட்சியில் நரிக்குறவா் குடியிருப்பில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இவா்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம்.

இந்த நிலையில் இரவு நேரங்களில் உள்ளூா் மட்டுமல்லாது வெளியூரைச் சோ்ந்த இளைஞா்களும் நரிக்குறவா் குடியிருப்பு பகுதியில் கஞ்சா போதையில் தொல்லை செய்கின்றனா்.

பெண்கள், சிறுமிகள் அந்த வழியாக செல்லும்போது கிண்டல் செய்வதும், கையைப் பிடித்து இழுப்பது போன்ற அராஜக செயல்களில் ஈடுபடுகின்றனா். தாக்குதல் நடத்துகின்றனா்.

எனவே, நரிக்குறவா் குடியிருப்பு பகுதியில் போலீஸ் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். கஞ்சா போதை ஆசாமிகளை அங்கு வராதவாறு தடுத்து நிறுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்ற எஸ்.பி. சீனிவாசபெருமாள், பரிசீலனை செய்து உறுதியாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, மனு அளிக்க வந்தவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com