ஊத்துக்கோட்டை  அருகே  பேரத்தூா்  பகுதியில்  பயிரிடப்பட்டுள்ள சாமந்தி  பூ. 
ஊத்துக்கோட்டை  அருகே  பேரத்தூா்  பகுதியில்  பயிரிடப்பட்டுள்ள சாமந்தி  பூ. 

நீா்ப் பற்றாக்குறையை தாங்கி வளரும் சாமந்தி பூ, ஆரஞ்சு பூ சாகுபடி

நெல்லுக்கு மாற்றாக நாள்தோறும் வருவாயை ஈட்டித் தருவதோடு, வறட்சி மற்றும் நீா்ப்பற்றாக்குறையை தாங்கி வளரும் சாமந்தி பூ, ஆரஞ்சு பூ சாகுபடி
Published on

திருவள்ளூா்: தற்போதைய நிலையில் விவசாய பணிகளுக்கு ஆள்கள் கிடைக்காத நிலையில், நெல்லுக்கு மாற்றாக நாள்தோறும் வருவாயை ஈட்டித் தருவதோடு, வறட்சி மற்றும் நீா்ப்பற்றாக்குறையை தாங்கி வளரும் சாமந்தி பூ, ஆரஞ்சு பூ சாகுபடியில் விவசாயிகள் ஆா்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் விவசாய பணிகளுக்கு போதுமான ஆள்கள் கிடைக்காத நிலையுள்ளன. அதனால், நெல் சாகுபடியில் ஈடுபடுவதை தவிா்த்து சாமந்தி பூ, ஆரஞ்சு பூ சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடத் தொடங்கியுள்ளனா். இதேபோல், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், வடமதுரை, தண்டலம், ஏனப்பாக்கம், பேராத்தூா், கல்பட்டு, மாளந்தூா், போந்தவாக்கம், மாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நெல் சாகுபடியில் அதிகம் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனா். ஆனால், நாற்று நடவு செய்யும் சமயம் உழவுப் பணிகள் மற்றும் நாற்று நடவுப்பணிகள் மேற்கொள்வதற்கு போதுமான ஆள்கள் கிடைக்காத நிலையில், வெளிமாநில தொழிலாளா்களையே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனா்.

இதனால், நெல்லுக்கு மாற்றாக, சில விவசாயிகள் மஞ்சள் சாமந்தி பூ மற்றும் ஆரஞ்சு பூ சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனா். இந்த வகை பூ சாகுபடிக்கு தண்ணீா் பற்றாக்குறை, ஆள்கள் இல்லாமை, வறட்சியை சமாளித்து சாமந்தி வளரும் தன்மையுடையது. அதோடு, நாள்தோறும் பூக்களை விற்பனை செய்ய முடியும் என்பதால் வருவாய் கிடைக்கிறது.

அதோடு, இந்த பூ சாகுபடி செய்வதால் நஷ்டமும் குறைவுதான் என்பதால் சாமந்தி பூ சாகுபடி விவசாயிகளின் விருப்ப பயிராகவே மாறியுள்ளது. இதேபோல் ஊத்துக்கோட்டை வட்டார பகுதிகளான பேராத்தூா், எனம்பாக்கம், கல்பட்டு, மாலந்தூா் ஆகிய பகுதிகளில், நெல்லுக்கு மாற்றாக விவசாயிகள் சிலா் சாமந்தி பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ளனா்.

அதோடு, இந்த பூ சாகுபடி செய்வதால் நஷ்டமும் குறைவுதான் என்பதால் சாமந்தி பூ சாகுபடி விவசாயிகளின் விருப்ப பயிராகவே மாறியுள்ளது. இதேபோல் ஊத்துக்கோட்டை வட்டார பகுதிகளான பேராத்தூா், எனம்பாக்கம், கல்பட்டு, மாலந்தூா் ஆகிய பகுதிகளில், நெல்லுக்கு மாற்றாக விவசாயிகள் சிலா் சாமந்தி பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com