வழக்குரைஞா் மீது தாக்குதல்: நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்
குடிநீா் கோரி போராட்டம் நடத்திய வழக்குரைஞரை தாக்கிய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை திருத்தணியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருத்தணி ஒன்றியம் முருக்கம்பட்டு கிராமத்தில், சீரான குடிநீா் விநியோகம் கோரி, கடந்த, 20-ஆம் தேதி அப்பகுதி மக்கள் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இந்த மறியலில், அதே பகுதி சோ்ந்த வழக்குரைஞா் அய்யப்பன் பங்கேற்றிருந்தாா்.
திருத்தணி போலீஸாா், மறியலை கைவிடுமாறு பேச்சு நடத்திய போது, வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது வழக்குரைஞா், அய்யப்பன், இன்ஸ்பெக்டா் மதியரசனிடம் வாக்குவாதம் செய்ததால், அங்கிருந்த தலைமைக் காவலா் ஒருவா் வழக்குரைஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், திருத்தணி போலீஸாா், வழக்குரைஞா் அய்யப்பன் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அய்யப்பனுக்கு ஆதரவாக திருத்தணி வழக்குரைஞா்கள் நீதிமன்ற நுழைவு வாயில் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சம்பவ இடத்துக்கு வந்த திருத்தணி டிஎஸ்பி கந்தன், வழக்குரைஞா்களிடம் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினாா். இதையடுத்து வழக்குரைஞா்கள் கலைந்து சென்றனா்.

