கல்வி, வேலைவாய்ப்புப் புரட்சியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாடெக்னிக் கல்லூரி

வேலூர் மாவட்டக் கல்வி வளர்ச்சியில் 34 ஆண்டுகளாக தனிப்பெரும் புரட்சியை செய்து வருகிறது வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி.
கல்வி, வேலைவாய்ப்புப் புரட்சியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாடெக்னிக் கல்லூரி

வேலூர் மாவட்டக் கல்வி வளர்ச்சியில் 34 ஆண்டுகளாக தனிப்பெரும் புரட்சியை செய்து வருகிறது வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி.
 வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்களும் சிறந்த தொழில் பயிற்சி பெற்று, தங்களது எதிர்கால வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தோடு இக்கல்லூரி தொடங்கப்பட்டது. கடந்த 34 ஆண்டுகளில் இக்கல்லூரியில் படித்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் தற்போது உயர் பதவிகள் வகித்து வருகின்றனர்.
 வேலூர்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே இயற்கை எழில் சூழ்ந்த, அமைதியான, நல்ல காற்றோட்டம் நிறைந்த இடத்தில் இக்கல்லூரி அமைந்துள்ளது. மிகப் பெரிய வகுப்பறைகளைக் கொண்ட கட்டடங்கள், நவீன இயந்திரங்கள் கொண்ட ஆய்வகங்கள், தகுதியான ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளின் அறிவுத் திறனை மேலும் வளர்க்க அதிநவீன நூலகம், ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இக்கல்லூரியில் உள்ளன.
 மனிதநேயம் மிக்க சமூக சேவகர், ஆன்மிகவாதி, மக்கள்நலத் தொண்டர் உள்ளிட்ட பல்வேறு தகுதிகள் வாய்ந்த வெப்பாலை எம்.எல்.நரசிம்மன், வெங்கடேஸ்வரா கல்வி அறக்கட்டளை சார்பில் 1985-ஆம் ஆண்டு ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியைத் தொடங்கினார். இக்கல்லூரி ஏஐசிடிஇ அங்கீகாரத்தையும், தமிழக அரசு தொழில்நுட்ப வாரியத்தின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இக்கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் ஆகிய மூன்றாண்டு பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
 தொழில்கல்வியுடன் சிறந்த வேலைவாய்ப்புகளையும் வளாக நேர்காணல் மூலமாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2016-17-ஆம் ஆண்டில் சுமார் 1,900 மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்பட்டுள்ளது.
 மேலும், மாணவ, மாணவியர்களிடையே துறை சார்ந்த திறமைகளை ஊக்குவிக்க "மினி புராஜக்ட்' குறைந்த செலவில் அனைத்துத் துறை மாணவர்களும் செய்து வருகின்றனர்.
 இதுதவிர, ஆண்டுதோறும் ஏழை, எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு அரசின் கல்வி உதவித் தொகையும் பெற்றுத் தரப்படுகிறது. வாரியத் தேர்வுகளில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு, முதலாமாண்டு மற்றும் துறை வாரியாக செமஸ்டருக்கு தலா ரு. 10 ஆயிரம், சிறப்பான தேர்ச்சி சதவீதம் அளிக்கும் ஆசிரியர்களுக்கு ரூ. 5 ஆயிரம் கல்லூரி நிறுவனரின் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.
 விளையாட்டுப் போட்டிகளிலும், தொழில்நுட்பப் போட்டிகளிலும் இக்கல்லூரி மாணவர்கள் மாநில அளவிலும், தேசிய அளவிலும் பரிசுகள் வென்று சாதனை படைத்துள்ளனர். கல்லூரியின் தலைவர் என்.ரமேஷ், துணைத் தலைவர் என்.ஜனார்த்தனன் ஆகியோர் இக்கல்லூரியை நிர்வகித்து வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com