Neuro-linguistic programming, சுருக்கமாக NLP எனப்படும் பயிற்சி முறை இன்று உலகமெங்கும் தனிமனித செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான வழிமுறையாக பயன்படுத்தப் படுகிறது.
திருச்சியில், Change in You அ.முகுந்தன் NLP முறையில் பள்ளி,கல்லூரி கல்லூரி மாணவர்களுக்கு அவர்களின் படிக்கும் திறனை மேம்படுத்தவும், அவர்களின் சுய எண்ணங்களை (பயம், ஆழ்மன தவறான நம்பிக்கைகள், மன அழுத்தம்) மாற்றி அமைத்து, வெற்றிக்கு வழிநடத்தும் சிறப்புப் பயிற்சிகளை வழங்குகிறார்.
சிறு மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு, அவர்களின் ஊழியர்களுக்கு NLP அடிப்படையில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும் வழங்குகிறார்.
தனி நபர்களுக்கும், NLP-யை தங்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்கு பயன்படுத்த விரும்புவர்களுக்கு ஒருநாள் பயிற்சிப் பட்டறையையும், மேஜிக் ஆஃப் சேன்ஜ் முகமது ரஃபி (இந்தியாவின் மிகச் சிறந்த NLP பயிற்சியாளர்) யுடன் இணைந்து 5 நாள்கள் சான்றிதழ் பயிற்சிகளையும் வழங்குகிறார்.
2019, செப்டம்பர் 7 ஆம் தேதி திருச்சியில் ஒருநாள் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இதில் திருச்சியின் சிறந்த தொழிலதிபர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் திருச்சி மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் பலதரப்பட்டவர்களும் பங்கேற்றனர்.
Change in You முகுந்தன், சமீபத்தில் ஹால்மார்க் பிசினஸ் ஸ்கூல், எம்பிஏ மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டிற்கான குறுகியகால சிறப்புப் பயிற்சிகளை வழங்கினார்.
மாணவர்களின் பயங்களை போக்கி அவர்களின் திறனை மேம்படுத்திட சிறப்பு பயிற்சிகளை வழங்குவதே தனது லட்சியம் என கூறுகிறார் .முகுந்தன். அவரை தொடர்புகொள்ள கைபேசி எண் : 9894401889; தொலைபேசி எண்: 0431-2436077.