- Tag results for சென்னை
![]() | சென்னையை வெளுத்து வாங்கிய மழைவளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. கனமழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனத்தில் செல்லும் பயணிகள் சற்று சிரமப்பட்டனர். |
![]() | தரமற்ற தார் சாலைசென்னை கோயம்பேடு மார்க்கெட் செல்லும் சாலை குண்டும், குழியுமாக பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டடு போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. எனவே உயர் அதிகாரிகள் சாலையை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. |
![]() | சென்னையில் மழைசென்னையில் கன மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இலங்கையை ஒட்டி நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது குமரிக் கடல் பகுதியில் நகர்ந்து வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இதனால் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கடுத்து வரும் 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக் கூடும் என தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தின் சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சி, திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழைசென்னையின் புறநகர்ப்பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்தது வருகிறது. இந்நிலையில் முகப்பேர், அம்பத்தூர், ஆவடி, திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, பெசன்ட் நகர், கோடம்பாக்கம், கிண்டி, போரூர், வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், தாம்பரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்னனர். |
![]() | பாதுகாப்பு பணியை எளிமையாக்ககாந்தியின் 150 வது பிறந்த நாள் முன்னிட்டு, சென்னை சென்ட்ரலில் ரயில் நிலையத்தில் கண்காணிப்பை பணியை எளிமையாக்க ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு ஃப்ரீகோ மொபைல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. படங்கள் உதவி: அஸ்வின் பிரசாத் |
![]() | சென்னயில் பலத்த மழைவளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் பலத்த மழை பெய்ததால் குளிர்ச்சியான காலநிலை நிலவியது. சென்னையின் திருவல்லிக்கேணி, வடபழனி, கிண்டி, தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், ராயபுரம், ஐஸ்ஹவுஸ், பூந்தமல்லி, தாம்பரம், மேடவாக்கம், பெருங்களத்தூர், அயப்பாக்கம், ஆவடி, கந்தன்சாவடி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் சாலைகளிலும், நகரிலுள்ள சுரங்கப் பாதைகளிலும் மழை நீர் தேங்கியது. இதனால், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், வாகனங்கள் சாலையில் ஊர்ந்து சென்றன. |
![]() | மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வுசென்னை தீவுத்திடலில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மழைநீர் சேகரிப்பு, நெகிழி ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தைத் தொடக்கி வைத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள். |
![]() | வில்லிவாக்கம் ஏரி புனரமைப்புசென்னையில், உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை புனரமைக்க, பெருநகர சென்னை மாநகராட்சியுடன் சமூக அக்கறையுள்ள வணிக பொது நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் வில்லிவாக்கம் ஏரி தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்படுவதால் ஏரிக்கு அருகே உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயந்து வருகிறது. |
![]() | சென்னையில் இடியுடன் கனமழைசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கன மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. படங்கள்: ஏ.எஸ். கணேஷ் |
![]() | சேத்துப்பட்டு ஏரிசென்னையில் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சேத்துப்பட்டு ஏரியில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக நீர்மட்டம் அதிகரித்து ஏரியில் படகு சவாரி செய்யும் பொதுமக்கள். மேலும் இங்கு தூண்டில் மீன்பிடி தளம், 1.5 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி பாதை, மீன்கள் கண்காட்சி கூடம், குழந்தைகள் விளையாட்டு பூங்கா, அடுக்குமாடி வாகன நிறுத்தும் இடம், பெரிய ஹோட்டல் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. |
![]() | வந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி IVதமிழகத்தின் தலைநகரம். இந்தியாவின் நான்காவது பெரிய நகரம். உலகின் 35 பெரிய மாநகரங்களில் ஒன்று என எண்ணற்ற பெருமைகளை தன்னகத்தே கொண்டது இன்றைய சென்னை. இது, 1996-ஆம் ஆண்டுக்கு முன்புவரை 'மெட்ராஸ்' என்றே அழைக்கப்பட்டு வந்தது. இப்படி வந்தோரை வாழ வைக்கும் சென்னையின் பெருமைகளை ஒருசில நிமிடங்களில் சொல்லிவிட முடியாது. கடந்த 1963ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை உருவாக்கப்பட்ட நாளை நினைவூட்டும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ம் தேதி மெட்ராஸ் டே கொண்டாடப்பட்டு வருகிறது. |
![]() | வந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி IIIதமிழகத்தின் தலைநகரம். இந்தியாவின் நான்காவது பெரிய நகரம். உலகின் 35 பெரிய மாநகரங்களில் ஒன்று என எண்ணற்ற பெருமைகளை தன்னகத்தே கொண்டது இன்றைய சென்னை. இது, 1996-ஆம் ஆண்டுக்கு முன்புவரை 'மெட்ராஸ்' என்றே அழைக்கப்பட்டு வந்தது. இப்படி வந்தோரை வாழ வைக்கும் சென்னையின் பெருமைகளை ஒருசில நிமிடங்களில் சொல்லிவிட முடியாது. கடந்த 1963ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை உருவாக்கப்பட்ட நாளை நினைவூட்டும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ம் தேதி மெட்ராஸ் டே கொண்டாடப்பட்டு வருகிறது. |
![]() | புத்துயிர் பெறும் தாமரை குளம்பல ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தாமரை குளம், ஒரு காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வந்தது. மேலும், மழைக்காலத்தில் சுற்று வட்டாரத்தில் இருந்து வரக்கூடிய தண்ணீர் இந்த குளத்தில் தேங்கி, சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கியது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த குளத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சரியாக பராமரிக்காததால், எங்கு பார்த்தாலும் குப்பை குவியலாக காட்சியளித்தது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றாக இணைந்து தாமரை குளத்தை தூர்வாரி கரையை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். |
![]() | வந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி II | #Madrasdayசென்னை - பழமையும் புதுமையும் கலந்த ஒரு அபூர்வ நகரம். பீச், கோயில்கள், பழமை வாய்ந்த கோபுரங்கள், சர்ச்சுகள், மசூதிகள் என்று புராதனம் ஒரு புறம், விதவிதமான மால்கள், மெட்ரோ ரயில்கள், நான்கு வழிச் சாலைகள், இரண்டு அடுக்கு பாலங்கள், வானளாவிய கட்டடங்கள் என்று புதுமை ஒரு புறம் என தன்னுடைய வளர்ச்சியை விரிவுபடுத்திக் கொண்டேயிருக்கிறது. |
![]() | வந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி I - பழைய படங்கள்தமிழகத்தின் தலைநகரம். இந்தியாவின் நான்காவது பெரிய நகரம். உலகின் 35 பெரிய மாநகரங்களில் ஒன்று என எண்ணற்ற பெருமைகளை தன்னகத்தே கொண்டது இன்றைய சென்னை. இது, 1996-ஆம் ஆண்டுக்கு முன்புவரை 'மெட்ராஸ்' என்றே அழைக்கப்பட்டு வந்தது. இப்படி வந்தோரை வாழ வைக்கும் சென்னையின் பெருமைகளை ஒருசில நிமிடங்களில் சொல்லிவிட முடியாது. காணந்தோறும் ஒரு அற்புதத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் சிங்காரச் சென்னைக்கு இன்று சிறப்பான நாள். வாழ்த்துவோம், வாழுவோம். |