டிவிட்டர் மற்றும் யூடியூப்புடன் இணைந்து, ஃபேஸ்புக் மற்றும் லிங்க்ட்-இன் ஆகிய சமூக தளங்களும், பயனாளர்களின் புகைப்படங்கள் சேகரிப்பை நிறுத்துமாறு க்ளியர்வியூ ஏஐ-யை வலியுறுத்தியுள்ளன.
தங்களது சமூக வலைத்தளங்களில் இருந்து, பயனாளர்களின் புகைப்படங்களை சேகரிப்பதை நிறுத்த வேண்டும் என்று நான்கு சமூக வலைத்தளங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
க்ளியர்வியூ ஏஐ என்ற சர்ச்சைக்குரிய செல்போன் செயலி, சுமார் 100 கோடி புகைப்படங்களை பயன்படுத்தி வருவதும், இவை அனைத்தும் ஃபேஸ்புக், யூடியூப், டிவிட்டர் பக்கங்களில் இருந்து எடுக்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, எங்களது விதிமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக, பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுவதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க முடியாது என்றும், உடனடியாக புகைப்படங்களை எடுப்பதை க்ளியர்வியூ நிறுத்த வேண்டும் என்றும் ஏற்கனவே டிவிட்டர், யூடியூப் ஆகியவை வலியுறுத்திய நிலையில், தற்போது ஃபேஸ்புக் மற்றும் லிங்க்ட்இன்-னும் இதே கோரிக்கையை முன் வைத்துள்ளன.