பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள் வருகிற மார்ச் 31 அன்று குறைந்த விலையில் ஒரு ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மன் செய்தித் தளமான iphone-ticker.de என்ற நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. மார்ச் 31 அன்று ஆப்பிள் நிறுவனம் மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அந்த நிகழ்ச்சியில் குறைந்த விலையில் ஐபோன் எஸ்இ 2 அல்லது ஐபோன் 9 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை 399 டாலராக (இந்திய மதிப்பில் ரூ.28,000) இருக்கும் என்றும் வருகிற ஏப்ரல் 3ம் தேதி விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.