சாம்சங் இசட் பிளிப் ஸ்மார்ட்போன் வருகிற பிப்ரவரி 26ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.
சாம்சங் இந்தியாவில் மடிக்கக்கூடிய புதிய ஸ்மார்ட்போனான கேலக்ஸி இசட் ஃபிளிப்பிற்கான முன்பதிவை அறிவித்துள்ளது. பிப்ரவரி 21ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம்.
சாம்சங் போன்களில் முதல்முறையாக மடிக்கக்கூடிய வகையில் கண்ணாடிடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 6.7 அங்குல டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. உங்கள் உள்ளங்கையில் பொருந்தக்கூடிய ஸ்டைலாக, ஸ்மார்ட்டாக இருக்கும்.
டைனமிக் அமோல்டு இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்ப்ளேவை முக்கிய கொண்டுள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் 7 என்எம் ஆக்டா கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.
பவர் கார்டு மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் வழியாக வேகமாக சார்ஜ் செய்யும் ஆதரவுடன் 3300 எம்ஏஎச் பேட்டரி கொண்டு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் இயங்குகிறது. 12 எம்பி அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் பின்புறத்தில் 12 எம்.பி கேமரா, முன்பக்கத்தில் 10 எம்.பி பஞ்ச்-ஹோல் கேமரா உள்ளது.
மடிக்கக்கூடிய வசதி இருப்பதால் எளிதாக உங்களது பாக்கெட் அல்லது கிளட்ச் பையில் வைத்துக்கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட சிறப்பு அம்சங்கள் அடங்கிய சாம்சங் இசட் பிளிப் ஸ்மார்ட்போன் வருகிற பிப்ரவரி 26ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ. 1.10 லட்சம்.