ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர் பத்து நாட்களுக்கு பிஎஸ் 4 வாகனங்களை விற்க உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது.
மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் அறிக்கையின்படி, பிஎஸ் 4 ரக வாகனங்கள் மாா்ச் 31 ஆம் தேதிக்கு முன்பு பதிவு செய்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிஎஸ் 4 ரக வாகனங்களை 2020 மாா்ச் 31-க்குப் பிறகு இந்தியாவில் விற்பனை செய்யவோ, பதிவு செய்யவோ கூடாது என உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது கரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர் பத்து நாட்களுக்கு பிஎஸ் 4 வாகனங்களை விற்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.