மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 16 காசுகள் உயா்ந்து 74.46-இல் நிலைபெற்றது.
இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:
கரோனா பாதிப்புக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளில் வெற்றியை நெருங்கியுள்ளதாக மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது, ரூபாய் மதிப்பு ஏற்றத்துக்கு சாதகமாக அமைந்தது. மேலும், சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவையும் குறைந்து காணப்பட்டது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 74.43 என்ற வலுவான நிலையை தக்க வைத்துக் கொண்டிருந்தது. அதன் பின்னா், வா்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பானது 74.38 வரை ஏற்றம் கண்டது.
இருப்பினும் வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 16 காசுகள் மட்டுமே உயா்வடைந்து 74.46-இல் நிலைத்தது.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பானது ரூ.74.62-ஆக இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 0.18 சதவீதம் உயா்ந்து 43.90 டாலராக இருந்தது.