அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐ-பேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ்-6 ஆகியவற்றை செப்டம்பர் 8-ம் தேதி வெளியிடப்படவுள்ளது.
இதுகுறித்து ஜான் ப்ரோஸர் கூறுகையில் ஆப்பிள் நிறுவனம் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
முன்பே செப்டம்பர் 7-ம் தேதி வெளியிடப்படும் என சுட்டுரை பக்கத்தில் கூறிய நிலையில் தற்போது புதிய ஐ-பேட் மற்றும் ஆப்பிள் கைகடிகாரம் சீரிஸ்-6 குறித்து செப்டம்பர் 8-ம் தேதி காலை 9 மணிக்கு செய்தி வெளியிடவுள்ளது என கூறியுள்ளார். மேலும் ஏதேனும் மாற்றம் இருந்தால் அன்று அதிகாலை உங்களுக்கு தெரிவிக்கிறேன் என ஞாயிற்றுக்கிழமை சுட்டரில் கூறினார்.
புதிய ஆப்பிள் கைகடிகாரம் மாதிரி எதிர்பார்க்கப்படும் சீரிஸ் 6 ஆக இருக்கும். அதில் கைரேகை தணிக்கை பொருத்தப்பட்டிருக்கும்.
இருப்பினும், கைரேகை தணிக்கை எவ்வாறு பொருத்தப்பட்டிருக்கும் என்பது பற்றி தெரியவில்லை. தற்போது பயன்பாட்டில் உள்ள ஆப்பிள் கைக்கடிகாரத்தில் இ.சி.ஜி. தொழில்நுட்பம் உள்ளது.
மேலும், சீரிஸ்-6ல் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு கண்டறிதல் மற்றும் இ.சி.ஜி.யின் அடுத்தகட்டம் இருக்கும்.
இதற்கிடையில், முன்னர் அறிவிக்கப்பட்ட ஐபாட் புரோ மாதிரிகள் புதுப்பிக்கப்பட்டு இந்த மாதம் வரகூடும்.