தென் கொரியா தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங்கின் வயர்லஸ் கேலக்ஸி இயர்பட்ஸ் 2 மாதிரி புதன்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கவுண்டர் பாயிண்ட் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட செய்தியில்,
புதிதாக வெளியாகவுள்ள இயர்பட்ஸானது, கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட கேலக்ஸி இயர்பட்ஸ் 1 மாதிரியைவிட குறைவான விலையில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.
வரும் புதன்கிழமை சாம்சங்கின் புதிய ஃபோல்ட் போன்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வில், கேலக்ஸி இயர்பட்ஸ் 2-வை வெளியிட வாய்ப்புள்ளது. இதன் விலை இந்திய மதிப்பின்படி, ரூ. 12,000 முதல் 13,500 இருக்கும் என கவுண்டர் பாயிண்ட் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த புதிய இயர்பட்ஸுக்கு ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள ஏர்பாட் 3 மாடல் சவாலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.