ஏர்டெல் நிறுவனத்தின் இயக்குநர் அஜய் சித்காரா தெரிவிக்கையில், "நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சிறு,குறு,நடுத்தர நிறுவனங்கள் துறை ஒற்றைச் சாளர முறையில் விரைந்து டிஜிட்டல் தொழில்நுட்ப தீர்வுகளைப் பெற உதவும் வகையில், என்எஸ்ஐசி}யுடன் இணைந்து இத்திட்டத்தை வகுத்துள்ளோம்" என்றார்.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் கீழ், நாட்டில் 6 கோடிக்கும் அதிகமான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29%, மொத்த ஏற்றுமதியில் 40% பங்களிக்கும் இந்தத் துறை 11 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது.