பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் நிறைவு

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (ஜூன் 28) பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 189 வரை சரிந்தது.
பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் நிறைவு
பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் நிறைவு

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (ஜூன் 28) பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 189 வரை சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 189.45 புள்ளிகள் சரிந்து 52,735.59 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுபெற்றது. இது மொத்த வர்த்தகத்தில்  0.36 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 45.65  புள்ளிகள் சரிந்து 14,617.85 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.29 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியல் உள்ள முதல் 30 தர பங்குகளில் 10 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் முடிவடைந்தது. ஏனைய 20 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.

அதிக பட்சமாக டைட்டன் கம்பெனி 1.56 சதவிகிதமும், டிசிஎஸ் 1.33 சதவிகிதமும், எச்.சி.எல். டெக் 1 சதவிகிதமும், பஜாஜ் பின்சர்வ் 0.87 சதவிகிதமும் சரிவுடன் காணப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com