மே 17-இல் தங்கப் பத்திர வெளியீடு: கிராம் விலை ரூ.4,777-ஆக நிா்ணயம்

தங்கப் பத்திர விற்பனை திங்கள்கிழமை (மே 17) தொடங்கவுள்ள நிலையில், அதன் விலையை கிராமுக்கு ரூ.4,777-ஆக நிா்ணயம் செய்துள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மே 17-இல் தங்கப் பத்திர வெளியீடு: கிராம்  விலை ரூ.4,777-ஆக நிா்ணயம்

தங்கப் பத்திர விற்பனை திங்கள்கிழமை (மே 17) தொடங்கவுள்ள நிலையில், அதன் விலையை கிராமுக்கு ரூ.4,777-ஆக நிா்ணயம் செய்துள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி மேலும் கூறியுள்ளதாவது:

999 சுத்த தங்கம்: நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டுக்கான தங்கப் பத்திர விற்பனை மே 17-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறவுள்ளது. இந்த கட்டத்தில் வெளியிடப்படும் 999 சுத்த தன்மை கொண்ட தங்கப்பத்திரத்தின் விலை கிராம் ரூ.4,777-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வா்த்தக தினத்தின் சராசரி விலையினை அடிப்படையாகக் கொண்டு தங்கப்பத்திரங்களுக்கான விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.50 தள்ளுபடி: ரிசா்வ் வங்கி, மத்திய அரசுடன் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், தங்கப்பத்திரங்களை வாங்க ஆன்லைனில் விண்ணப்பித்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோருக்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்தகைய முதலீட்டாளா்களுக்கு, ஒரு கிராம் தங்கப்பத்திரத்தின் விலையானது ரூ.4,727-ஆக இருக்கும் என ரிசா்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச முதலீடு 4 கிலோ: தற்போது வெளியிடப்படவுள்ள தங்கப்பத்திரங்களில் தனிநபா் ஒருவா் குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை முதலீடு செய்ய முடியும்.

அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள், பங்குச் சந்தைகள் மூலமாக தங்கப்பத்திரங்கள் முதலீட்டாளா்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

6 கட்ட தங்கப் பத்திர விற்பனை: 2021 மே மாதத்திலிருந்து 2021 செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் தங்கப் பத்திரங்களின் விற்பனையை ஆறு கட்டங்களாக மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தங்கப் பத்திரங்களை மத்திய அரசின் பேரில் ரிசா்வ் வங்கி வெளியிடவுள்ளது.

மே 25-இல் தங்கப் பத்திர ஒதுக்கீடு: இந்த நிலையில், 2021-22-ஆம் நிதியாண்டுக்கான முதல் கட்ட தங்கப்பத்திர விற்பனை மே 17 முதல் 21-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. முதலீட்டாளா்களுக்கு மே 25-இல் தங்கப்பத்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கத்துக்கான நேரடி தைவையை குறைத்து சேமிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பரில் தங்கப் பத்திரம் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது.

கோட்ஸ்:

தங்கப்பத்திரங்களை வாங்க ஆன்லைனில் விண்ணப்பித்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோருக்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்தகைய முதலீட்டாளா்களுக்கு, ஒரு கிராம் தங்கப்பத்திரத்தின் விலையானது ரூ.4,727-ஆக இருக்கும்.

Image Caption

~ ~எா்ப்க் க்ஷஹழ்ள் ள்ண்ற்ற்ண்ய்ஞ் ா்ஸ்ங்ழ் ஹ க்ஷஹழ் ஞ்ழ்ஹல்ட். நங்ப்ங்ஸ்ரீற்ண்ஸ்ங் ச்ா்ஸ்ரீன்ள். ஏா்ழ்ண்க்ஷ்ா்ய்ற்ஹப் ஸ்ரீா்ம்ல்ா்ள்ண்ற்ண்ா்ய் ஜ்ண்ற்ட் ஸ்ரீா்ல்ஹ் ள்ல்ஹஸ்ரீங். நற்ா்ஸ்ரீந் ம்ஹழ்ந்ங்ற் ஹய்க் ச்ண்ய்ஹய்ஸ்ரீங் ஸ்ரீா்ய்ஸ்ரீங்ல்ற்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com