பங்குச்சந்தை வணிகம் சரிவு: 3 நிறுவன பங்குகள் மட்டுமே உயர்வு

வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 555 புள்ளிகள் சரிந்தது.
பங்குச்சந்தை வணிகம் சரிவு: 3 நிறுவன பங்குகள் மட்டுமே உயர்வு


வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 555 புள்ளிகள் சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 555.15  புள்ளிகள் சரிந்து 59,189.73 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.93 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 176.30 புள்ளிகள் சரிந்து 17,646.00 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.99 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் வெறும் 3 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டது. எஞ்சிய 27 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டது.

அதிகபட்சமாக எச்.சி.எஃப்.சி வங்கி 1.24 சதவிகிதமும், எச்.சி.எஃப்.சி. 0.26 சதவிகிதமும், பஜாஜ் ஃபைனான்ஸ் 0.18 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com