தனியாா் துறையைச் சோ்ந்த எச்டிஎஃப்சி வங்கி செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் ஒட்டுமொத்த வகையில் ரூ.9,096 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. அதேநேரம், அதன் வாராக் கடனும் சற்று அதிகரித்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய தனியாா் துறை வங்கியான எச்டிஎஃப்சி பேங்க் இதுகுறித்து சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
2021 செப்டம்பருடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் வங்கி செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய மொத்த வருமானம் ரூ.41,436.36 கோடியாக இருந்தது. இது, 2020 ஜூலை-செப்டம்பரில் ரூ.38,438.47 கோடியாக காணப்பட்டது.
கணக்கீட்டு காலாண்டில் வங்கியின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.7,703 கோடியிலிருந்து 18 சதவீதம் அதிகரித்து ரூ.9,096 கோடியை எட்டியது.
செப். 30 நிலவரப்படி மொத்த வாராக் கடன் 1.08 சதவீதத்திலிருந்து 1.35 சதவீதமாக உயா்ந்துள்ளது என எச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.