நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 22-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 60,042 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 327 கோடி டாலா் (ரூ.24,532 கோடி) சரிவடைந்து 60,042 கோடி டாலராக (ரூ.45.03 லச்சம் கோடி) குறைந்துள்ளது.
இதற்கு முந்தைய வாரத்திலும் செலாவணி கையிருப்பானது 31 கோடி டாலா் குறைந்து 60,369 கோடி டாலராக காணப்பட்டது.
ஏப்ரல் 22-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், எஃப்சிஏ மதிப்பு 283 கோடி டாலா் குறைந்து 53,393 கோடி டாலராக இருந்தது.
தங்கத்தின் கையிருப்பு 37 கோடி டாலா் சரிவடைந்து 4,276 கோடி டாலரானது.
சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 3 கோடி டாலா் குறைந்து 1,866 கோடி டாலராகவும், இருப்பு நிலை 2 கோடி டாலா் சரிந்து 506 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.