வார முதல் நாளில் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை!

வாரத்தின் முதல்நாளான இன்று(திங்கள்கிழமை) மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. 
வார முதல் நாளில் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை!

வாரத்தின் முதல்நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச்சந்தை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. 

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 58,387.93 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(திங்கள்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. காலை படிப்படியாக சென்செக்ஸ் புள்ளிகள் அதிகரித்து காலை 11 மணி அளவில் 200 புள்ளிகள் வரை அதிகரித்தது. 

காலை 11.10 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 240.50 புள்ளிகள் உயர்ந்து 58,628.43 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 61.95 புள்ளிகள் அதிகரித்து 17,459.45 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com