பொதுத் துறை நிறுவனமான கோல் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிகர லாபம், 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் 178 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான அந்த காலகட்டத்தில் நிறுவனம் ரூ.8,834 கோடி ஒருங்கிணைந்த நிகல லாபம் ஈட்டியது.
கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3,174 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிகர லாபம் 178 சதவீதம் எழுச்சியடைந்துள்ளது.
இந்த மாதங்களில் நிறுவனத்தின் விற்பனை 39 சதவீதம் அதிகரித்து ரூ.32,498 கோடியாக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.