புதுதில்லி: தங்கம் இறக்குமதி வரி 15% உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வரி உயர்த்தப்பட்டுள்ளதால், தங்கத்தின் இறக்குமதி குறைந்து இந்தியாவில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதையும் படிக்க: தங்கம் இறக்குமதி வரி உயர்வால் என்னவாகும்? விலை அதிகரிக்குமா?
தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10.75%-லிருந்து 15% ஆக உயர்த்தி மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதை தடுக்கவும், தங்கம் இறக்குமதியை குறைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தங்கத்தின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறக்குமதி வரி உயர்வைத் தொடர்ந்து இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.